ஆலய ஊழியர்கள் போராட்டம்: அன்னதானம், அர்ச்சனை நிறுத்தம்

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத் திருக் கோயில் பணியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு திருக் கோயில்கள் முதுநிலைப் பணியா ளர்கள் சங்கப் பொதுச்செயலர் ஜீவானந்தம், நாளை முதல் கோவில்களில் அர்ச்சனைகளும் அன்னதானமும் நிறுத்தப்படும் என்றார். திருக்கோவில் பணியாளர்க ளுக்கு பணிக்கொடை வழங்கப் பட வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கை களை அப்பணியாளர்கள் வலியு றுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சில போராட் டங்களும் நடத்தப்பட்டன. இதை யடுத்து 27ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருப்பதாக ஜீவானந்தம் கூறினார். "அறநிலையத்துறைக்கு உட் பட்ட திருக்கோயில்களில் வழக் கமாக நடைபெறும் பூசைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படமாட்டாது. திருவிழாக் கள், தேரோட்ட நிகழ்வுகளும் வழக்கம்போல் நடைபெறும். "ஆனால் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குதல், அர்ச்சனை செய்தல், நேர்த்திக்கடன் செலுத் துதல் உள்ளிட்டவை நடைபெறாது. கோவில்களில் அன்னதானமும் வழங்கப்பட மாட்டாது" என்றார் ஜீவானந்தம்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!