குமுறும் எரிமலை; பாலியில் தவிக்கும் பயணிகள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலி விமான நிலையம் எரிமலைச் சாம்பல் பரவியதன் காரணமாக ஏறக்குறைய 12 மணி நேரம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையம் மூடப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தோனீசியாவின் மிகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான பாலியில் இருக்கும் விமான நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை அதி காலை 3 மணிக்கு மூடப்பட்டது.

அகுங் என்ற எரிமலையின் சீற்றமே அதற்கு காரணம். விமான நிலையம் நேற்று பிற் பகல் 2.30 மணிக்குத் திறக்கப் பட்டதாக அந்த விமான நிலை யத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் செயலாளரான திரு இஸ்ரவாடி தெரிவித்தார். எரிமலைச் சாம்பல் காரணமாக பாதிக்கப்படாத மாற்றுத் தடங்கள் வழியாக விமானங்கள் பறந்து செல்ல முடியும் என்பதால் விமான நிலையம் திறக்கப்பட்டது என்று திரு இஸ்ரவாடி தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

பாலியில் எரிமலை குமுறுவதால் விமான நிலையம் மூடப்பட்டு 12 மணி நேரத்துக்குப் பிறகு திறக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!