130 பேர் சென்ற படகு விபத்து; மீட்பு நடவடிக்கை தீவிரம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் மாயமான 130 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள் ளது. நேற்று மாலை நிலவரப்படி படகு விபத்தில் ஆறு பேர் பலி யானதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. 139 பேருடன் சென்ற படகில் நீர் புகுந்ததால் படகு கவிழ்ந்த தாக இந்தோனீசிய போக்கு வரத்து வாரியம் தெரிவித்தது. மேலும் படகில் இருந்த மற்ற வாகனங்களும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கி றது.

இந்தோனீசியாவின் சுலாவசி தீவில் இருந்து சிலயார் தீவிற்கு படகு சென்று கொண்டிருந்த போது, வீசிய கடும் காற்றாலும் உயரே எழும்பிய அலைகளாலும் படகு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து தொடர்பாக வெளியான படம் ஒன்றில், உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்த படகுப் பயணிகள் சிலர் தண்ணீ ரில் நீந்தியபடி உதவிக்காக காத் திருப்பது தெரிகிறது. இரு வாரங்களுக்கு முன் சுமார் 164 பேருடன் சென்ற படகு தோபா ஏரியில் கவிழ்ந்தது. இதனால் மாயமானவர்களைத் தேடும் பணியை இந்தோனீசியா நேற்று முன்தினம் நிறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!