வள்ளிமுத்து: முழுமையான காதல் கதை

உண்மைச் சம்பவங்களை மைய மாக வைத்து உருவாகும் படங்க ளின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உருவாகும் மற்றொரு படம் 'பார்த்திபன் காதல்'. இதில் நாயகன், நாயகி உட்பட பெரும்பாலானோர் புதுமுகங்க ளாம். எஸ் சினிமா என்ற புதிய பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தங்கையா மாட சாமி ஒளிப்பதிவு செய்ய, பில்லா இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குபவர் வள்ளிமுத்து.

இவர் 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' உள்ளிட்ட படங் களை இயக்கிய ராஜபாண்டியிடம் உதவி இயக்குநராகப் பணியாற் றிய அனுபவம் உள்ளவர். "இந்தப் படத்தில் யோகி என்ற இளையரை நாயகனாக அறிமுகம் செய்கிறேன். கதா நாயகியாக வர்‌ஷிதா அறிமுக மாகிறார். இது உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உரு வாகும் படம். அதேசமயம் புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக இருக்கும். யோகி ஓவியக் கல்லூரி மாண வராகவும், வர்‌ஷிதா கிராமத்துக் கல்லூரி மாணவியாகவும் நடிக் கின்றனர். "அண்மைக் காலமாக தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை கலந்த பேய்க் கதைகளும், அதிரடிப் படங்களுமாகவே வந்து கொண் டிருக்கின்றன. இந்தச் சூழலில் 'பார்த்திபன் காதல்' ஒரு முழு மையான காதல் கதையாக உரு வாகிறது," என்கிறார் இயக்குநர் வள்ளிமுத்து.

'பார்த்திபன் காதல்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் யோகி, வர்‌ஷிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!