'பேராண்மை', 'பூலோகம்', 'டிக் டிக் டிக்' படங்களில் இடம்பெற்ற சண்டைக் காட்சி களில் நடித்தபோது பலமுறை உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்தம் சொட் டச் சொட்ட ரொம்பவே வலியுடன் அவதிப் பட்டேன். ஆனாலும் படங்களைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் கைதட்டல் சத்தத் தில் இந்த வலி எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விட்டது என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். திரைத்துறை சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது கடின உழைப் பால் ரசிகர்கள் மனதில் தனி ஒருவனாக முத்திரை பதித்து வருகிறார் ஜெயம் ரவி.
"எங்கள் குடும்பத்தில் அனைவருமே கஷ்டப்படுவோம். எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடமே அப்படித்தான். "கஷ்டப்படு; பலன் வராமல் இருக்காது. தாமதமாக வந்தாலும் ஒருநாள் கண்டிப் பாக பலன் வரும்' என்பதே எங்கள் குடும்பத்தினரின் தாரக மந்திரம். அதை நாங்கள் உறுதியாகப் பின்பற்றுகிறோம்," என்கிறார் ஜெயம் ரவி.