ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு ரூ.26,227 கோடி வருவாய்

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் அரசுக்கு கடந்த 11 மாதங் களில் 60,430 கோடி ரூபாய் வரு வாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை சார்பில் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை ஒரு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறையின் தமிழக மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் சி.பி. ராவ், "ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்து பவர்களின் எண்ணிக்கை 9 லட் சத்து 80 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது," என்றார்.

"ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின் கடந்த 2017 ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரையிலான ஒன்பது மாத காலத் தில் மாநில அரசுக்கு 26,227 கோடி ரூபாயும் மத்திய அரசுக்கு 24,745 கோடி ரூபாயும் என மொத்தத்தில் 50,972 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. "கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 9,458 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 60 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருக்கிறது," என்று திரு சி.பி. ராவ் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!