1962 நீர் உடன்பாட்டை சிங்கப்பூர் மதித்து நடக்கும்

மலேசியாவுடன் கூடிய 1962 தண்ணீர் உடன்பாட்டின் நிபந் தனைகளை சிங்கப்பூர் முற்றிலும் கடைப்பிடிக்கும் என்று வெளி யுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவித்தார். மலேசியாவும் அந்த உடன் பாட்டை கடைப்பிடித்து நடக்கும் என்று சிங்கப்பூர் எதிர்பார்ப்பதாக வும் அவர் கூறினார். அந்த உடன்பாட்டு நிபந்தனைகளில் தண்ணீர் விலையும் உள்ளடங் கும் என்றார் அவர். மலேசியாவுடன் கூடிய இரு தரப்பு உறவு தொடர்பான நாடாளு மன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், அந்த 1962 உடன்பாடு, சாதாரண ஓர் உடன்பாடு அல்ல என்றார். "1962 தண்ணீர் உடன்பாட் டுக்கு சிங்கப்பூரும் மலேசியாவும் 1965 பிரிவினை உடன்பாட்டில் உத்திரவாதம் அளித்துள்ளன. அந்த உடன்பாடு ஐநாவில் பதி யப்பட்டு இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார். "அந்த உடன்பாட்டை எப்படி மீறினாலும் அது பிரிவினை உடன்பாட்டை கேள்விக்கு உள் ளாக்குவதாக இருக்கும். இந்தப் பிரிவினை உடன்பாடே சிங்கப்பூர் இப்போது சுதந்திரமான, சுயாதி பத்திய நாடாக நிலைத்திருப்ப தற்கு அடிப்படையானது," என்று அமைச்சர் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!