ஜப்பானில் மழையும் வெள்ளமும்: மரண எண்ணிக்கை 140 ஆக உயர்வு

தோக்கியோ: ஜப்பானில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச் சரிவிலும் சிக்கி உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானில் மழை தொடர்ந்து பெய்வதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் கட்டட இடிபாடு களுக்கு இடையில் சிக்கி யுள்ளவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் மேற்கு ஜப்பான் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது. பாதுகாப்பு கருதி 2 மில்லியன் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கு வதற்கு பயிற்சி கூடங்களும் பள்ளிக்கூடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் கூறினர். ஜப்பானில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அறிவிக்கப் பட்டுள்ளதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மேற்குப் பகுதி அபாயத் தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்ததுடன் பல வீடுகள் முற்றாக சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின. பாதிக்கப்பட்டவர்களுக்கு போலிசார், ராணுவ வீரர்கள் உட்பட பலர் உதவி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!