இரு ஆடவர்களைத் தாக்கிய தம்பதி; சன்னல் உடைப்பு

ஸ்பூனர் ரோட்டில் இருக்கும் புளோக் ஒன்றின் முதல்மாடி ஓரறை வீட்டில் தம்பதி இருவர், இரண்டு ஆடவர்களை மூங்கில் கழிகள் உட்பட பலவற்றையும் கொண்டு தாக்கும் காணொளி இணையத்தில் பரபரப்பாகி இருக் கிறது. எட்டு நிமிடம் ஓடும் அந்தக் காணொளி ஜூலை 10ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அந்தக் காணொளியில் தென் பட்ட மாது, வேலையில்லாதவர் என்றும் அவருக்கு 35 வயது இருக்கும் என்பதும் அந்தக் காணொளி சென்ற சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதனிடையே, தன் பெயரைக் குறிப்பிடாத அந்த மாதின் புதல்வி, அந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சுமார் 20 பேர் வந்து வீட்டு சன்னலை உடைத்துவிட்டதாகக் கூறினார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த அந்தச் சன்னல் உடைப்பு சம்பவம் பற்றி தங்களிடம் தெரி யப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் சம்பவத்தைக் குறும்புத்தனம் என்று தாங்கள் வகைப்படுத்தி இருப்பதாகவும் போலிஸ் பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார். புலன்விசாரணை தொடர்வதாக வும் போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!