பெங்களூரு: நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் வரும் என தாம் உறுதியாக நம்புவதாக அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அம முக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், துரோ கத்தைக் கருவறுத்து மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றப் போவது உறுதி என்றார்.
"நான் ஏற்கெனவே முட்டை வடிவில் தான் நடப்பு ஆட்சிக்கு எதிராக ஒரு வெடிகுண்டு வரும் என்று கூறியிருந்தேன். தற்போது முட்டை நிறுவனங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இனி அதிமுகவினர் என்று கூறிக்கொள்பவர்கள் முட்டைப் பிரசாரம்தான் செய்ய முடியும். "முட்டைக்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு எதிராக மேலும் ஒரு வெடிகுண்டு தயாராக உள் ளது. அது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு," என்றார் தினகரன். தமிழகத்தில் தற்போது துரோக ஆட்சி நடைபெற்று வரு வதாகக் குறிப்பிட்ட அவர், தமி ழக அரசுக்குத் தற்போது ஏற்பட் டுள்ள நெருக்கடி அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றார்.