நீர் கசிவு: கட்டட நிர்வாகக் குழுவுக்கு அபராதம்

கசிந்துகொண்டிருந்த தண்ணீர்க் குழாயைப் பழுதுபார்க்கத் தவறிய நிக்கொன் கார்டன்ஸ் கூட்டுரிமை வீட்டு நிர்வாகக் குழுவிற்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்று எச்சரிக்கை அறிவிப்புகளுக்குப் பிறகும் நான்கு நாட்களுக்கு நீர் கசிவை நிறுத்தத் தவறியதால் பொதுப் பயனீட்டுக் கழகம் அபராதத்தை விதித்ததாக நேற்று தெரிவித்தது. நீர் கசிந்ததில் 4,000 கன மீட்டர் தண்ணீர் வீணாகியது என்றும் இந்த அளவு ஒன்றரை ஒலிம்பிக்- நீச்சல் குளத்தை நிரப்பும் நீர் அளவுக்குச் சமம் என்றும் கூறப்பட்டது.

தண்ணீர்க் கசிவு குறித்து ஜூன் 28 அன்று பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து உடனே நிலத்தடி சேவை குழாயிலிருந்து வந்த கசிவை நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியதைப் பொருட்படுத்தாமல் கட்டட நிர்வாகம் ஜூலை 2ஆம் தேதி அன்றுதான் நீர்க் கசிவை நிறுத்தியது. இக்குற் றத்திற்காக நிர்வாகத்திற்கு $10,000 வரை அபராதமும் ஓராண்டு காலம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!