சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற் பட்ட வழக்குக் கட்டுகள் மாய மாகி இருப்பதன் தெடர்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ள நிலையில், இத் தகைய மர்மங்களைத் தவிர்க்க மின்னிலக்கமயம்தான் ஒரே தீர்வு என உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு தெரிவித்து உள்ளார். முன்னாள் நீதிபதி தமிழ்நாட் டின் 'இந்து தமிழ்' நாளிதழுக்குப் பேட்டி அளித்தார். உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கள் தீர்ப்பளிப்பது என்பது 5%தான். எஞ்சிய 95% பணி, வழக்கு ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது தான். வழக்குகளைப் பொறுத்த வரையில் வழக்குக் கட்டுகள் பல இடங்களுக்கும் செல்வதைத் தவிர்க்க முடியாது.
கட்டுகள் ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்குச் செல்லும்போது அதைக் கண் காணிக்க பதிவேட்டில் கண்டிப் பாக பதியவேண்டும். இந்த மெத்த கட்டுகளுக்கும் பெறுப் பாளிகள் சம்பந்தப்பட்ட நீதிபதி கள்தான்.
கட்டுகள் மாயமாவதைத் தடுக்க ஒரேவழி நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளைக் காகித மற்ற மின்னிலக்கமயம் ஆக்கு வதுதான். தமிழ்நாட்டில் காணா மல்பேன வழக்குக் கட்டுகள் எல்லாம் கீழ் நீதிமன்றத்தில் இருந்து வந்த குற்றவியல் வழக்குகள் சம்பந்தப்பட்டவை.