ஆக விலைமிக்க கோல்காப்பாளர்

லண்டன்: உலகிலேயே ஆக விலைமிக்க கோல்காப்பாளராகி உள்ளார் பிரேசிலைச் சேர்ந்த 25 வயது அலிசன் பெக்கர். அவர் நேற்று முன்தினம் லிவர்பூலில் இணைந்தார். லிவர்பூலுடனான 115 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் அலிசன் கையெழுத்திட்டுள்ளார். கடந்த பருவத்தில் அலிசன் இத்தாலிய லீக்கில் போட்டியிடும் ரோமாவுக்காக 37 ஆட்டங்களில் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அலிசன் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு ரோமா தகுதி பெற முக்கிய காரணமாக இருந்தார். அரையிறுதியில் லிவர்பூலிடம் ரோமா தோற்று வெளியேறியது.

அதுமட்டுமல்லாது, அண்மை யில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி யில் பிரேசிலுக்காக கோல் காப்பாளராக அலிசன் விளை யாடினார். காலிறுதி வரை சென்ற பிரேசில் பெல்ஜியத்திடம் 2=1 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. உலகக் கிண்ணப் போட்டியில் அலிசன் மிக அருமையாக விளையாடி உலகெங்கும் உள்ள காற்பந்துக் குழுக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அவரை ஒப்பந்தம் செய்ய செல்சியும் விரும்பியதாக அறியப்படுகிறது. ஆனால் அவரை ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் எடுத்த முயற்சி வெற்றி கண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!