கழிவறையில் பெண்ணைப் படம்பிடித்த ஆடவர் கைது

சிம் எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழக வளாகத் தின் நான்காம் மாடி கழிவறையில் குமாரி லியின் லீயை தொலைபேசிவழி படம் பிடித்த குற்றத்திற்காக 21 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை நடந்த இச்சம்பவத்தில் தான் இருந்த குறுவறைக்கு மேல் யாரோ ஒருவர் தொலைபேசியைப் பிடித்துக் கொண்டிருந்ததை மாணவி லியின் லீ பார்த்தார். உடனே, வெளியில் வந்த அவர், கழிவறை வெளியே தன் நண்பருடன் காத்திருந்து சிறிது நேரம் கழித்து வெளியேறிய ஆடவரை வழிமறித்துப் பெண்கள் கழிவறையில் அந்த ஆடவர் இருந்ததற்கான காரணத்தைக் கேட்டார். தனக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் தெரியாமல் உள்ளே நுழைந்ததாகவும் அவர் கூறியதாக அறியப்படுகிறது. கழிவறை நான்காவது மாடியில் இருந்தாலும் தனக்கு இரண்டாவது மாடியில் வகுப்புகள் இருந்ததாக ஆடவர் கூறியதாகவும் குமாரி லீ தெரிவித்திருந்தார். ஆடவர் கைது செய்யப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!