‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தை வெளியிடத் தடை

'நட்புனா என்னானு தெரியுமா' படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் அப்படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். இதில் கவினும், ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்துள் ளனர். எதிர்வரும் 27ஆம் தேதி இப்படம் திரைகாண இருந்தது. இந்நிலையில் திரைப்பட விநியோகிப்பாளர் மலேசியா பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையைப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து தாம் பெற்றதாகவும் இதற்காகப் பல கட்டங்களாக ரூ.25.20 லட்சம் தந்ததாகவும் பாண்டியன் தெரிவித்துள்ளார். "ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே எனக்குரிய பணத்தைத் தராமல் படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும்,'' என பாண்டியன் தமது மனுவில் கோரியுள்ளார். இதையடுத்து, இப்படத்தை எதிர்வரும் 30ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!