சிங்கப்பூர் ஏர்லைன்சில் மாது மரணம்

தைவானின் தலைநகர் தைப்பேயிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவையில் இரண்டு நாட்களுக்கு முன்னர், 77 வயது சிங்கப்பூர் மாது ஒருவர் மாண்டார். எஸ்கியூ877ல் அந்தப் பயணி மாண்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேராளர் உறுதி செய்தார். "தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக எங்களால் மேற்கொண்டு எந்தத் தகவலையும் வெளியிட முடியவில்லை," என்று அந்தப் பேராளர் கூறினார்.

சாங்கி விமான நிலையத்தில், இயற்கைக்கு மாறான மரணம் குறித்த தகவல், இரவு 7.02 மணிக்கு வந்ததாகப் போலிசார் தெரிவித்தனர். அசைவின்றிக் காணப்பட்ட அந்த மூதாட்டி மாண்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர். சக்கர நாற்காலியில் இருந்த அந்த மூதாட்டிக்கு பல்வேறு மருத்துவச் சிக்கல்கள் இருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. தைவானைச் சேர்ந்த தனது மகளுடன் அந்த மாது விமான பயணத்தில் இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!