ஏதன்சில் ஒருவரையொருவர் தழுவியபடி தீக்கிரையான 26 பேர்

ஏதன்ஸ்: கிரேக்கத் தலைநகர் ஏதன்ஸ் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 79 பேர் பலியாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிறிய குன்று ஒன்றின் மீது குழந்தைகள், பெரியவர்கள் என 26 பேர் ஒருவரையொருவர் தழுவியபடி தீக்கிரையாகி இருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. தீயிலிருந்து தப்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முன்பே அவர்களை தீ சுற்றி வளைத்து இருக்க வேண்டும் எனவும் தீயிலிருந்து தப்ப முடியாது என்பதை அறிந்து அவர்கள் ஒன்றாகக் கூடியிருக்க வேண்டும் எனவும் கிரேக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் நிக்கோஸ் எகோனோமோபோலஸ் கூறினார்.

கிரேக்க வரலாற்றிலேயே ஆக மோசமான தீச்சம்பவம் இது என்று கூறப்படுகிறது. கிரேக்கத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப் படும் என அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!