இசைப்பாறை கண்டுபிடிப்பு

ஓசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக் கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மணி ஓசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த இசைப்பாறையில் 'சிக்கம்மா தொட்டம்மா' ஆகிய தெய்வங்கள் பல்லாங்குழி விளையாடினர் எனவும் இது தெய்வப்பாறை எனவும் அந்த கிராம மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். முற்றிலும் மற்ற பாறைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் சிறு சிறு பல்லாங்குழி வடிவத்துடன் இந்தப் பாறை அமைந்துள்ளது. மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு வரும் ஆடு, மாடுகளை வனவிலங்குகளிடமிருந்து காக்க இசைப்பாறையைத் தட்டி இசை எழுப்பி வருகிறார்கள். பாறை பற்றிய செய்தி அறிந்து சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!