பொய்ச் செய்தி பரவல் ஜனநாயகத்திற்கு மிரட்டல்

லண்டன்: பொய்யான செய்திகள் பரவுவது ஜனநாயகத்திற்கு ஒரு மிரட்டல் என்று பிரிட்டனில் நாடாளுமன்றக் குழு எச்சரித் துள்ளது. கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனத் தகவல்கள் திருடப் பட்டதைத் தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்புவோரை டிஜிட்டல், கலாசார, ஊடக, விளையாட்டுத் துறை குழு விசாரணை செய்து வருகிறது. அக்குழு வெளியிடவுள்ள முதல் அறிக்கையில் சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையான விதி முறைகளை எதிர்நோக்க வேண்டும் என்று யோசனை கூறப் பட்டுள்ளது.

தேர்தலில் தலையிடுவதை தடுத்து நிறுத்த உதவும் யோசனைகளும் அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக இன்று வெளி யிடப்படவுள்ள நிலையில் அதன் ஒரு பிரதி வெள்ளிக்கிழமை அன்றே வெளியில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்த குழுவின் தலைவர் டோமினிக் குமிங்ஸ் அவரது வலைத்தளத்தில் அந்த அறிக்கை பற்றிய செய்திகளை வெளி யிட்டுள்ளார். அந்த விசாரணக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை யில் பங்குகொள்ளுமாறு டோமினிக் கேட்டுக்கொள்ளப்பட்ட போது அதற்கு அவர் மறுத்து விட்ட நிலையில் அந்த அறிக்கை "பொய் செய்தி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!