கனமழை, வெள்ள பாதிப்புக்கு 6 மாநிலங்களில் 537 பேர் பலி

புதுடெல்லி: இந்த ஆண்டு இந்தி யாவின் ஆறு மாநிலங்களில் பெய்த பருவமழை, வெள்ள பாதிப்பு களுக்கு சுமார் 537 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதில் ஆக அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டும் 138 பேர் பலியாகினர். கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், அசாம், உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சின் தேசிய அவசர கால மீட்பு மையம் வெளியிட் டுள்ள தகவல்களின்படி, ஆறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மகாராஷ்டிராவில் 138 பேரும் கேரளாவில் 125 பேரும் மேற்கு வங்கத்தில் 116 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 70 பேரும் குஜராத்தில் 52 பேரும் அசாமில் 34 பேரும் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் 26 மாவட் டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளன. இதற்கு அடுத்ததாக மேற்கு வங்கத்தின் 22 மாவட்டங்கள், அசாமின் 21 மாவட்டங் கள், கேரளாவின் 14 மாவட்டங்கள், குஜராத்தின் 10 மாவட்டங்களுடன் உத்தரப்பிர தேசத்தின் பெரும் பாலான பகுதிகளும் கனமழை, வெள்ளப் பாதிப்புக்கு இலக்காகி உள்ளன.

புதுடெல்லியில் யமுனா நதிக் கரை ஓரம் கட்டப்பட்டிருந்த வீட்டை இப்படி வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை ஆற் றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!