கம்பன் விழாவில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவர்களின் நடிப்புத் திறன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய கம்பன் விழாவில் சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் நடிப்புத் திறன் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்தக் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் எழுதிய இலக்குவன் பற்றிய குறுநாடகத் திற்கு மாணவர்கள் உயிர் கொடுத் தனர். பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி கங்கா, திரு. வின்சண்ட் ராஜ் ஆகியோரின் உதவியுடன் இவண் புரோடக்ஷன்ஸ் நிறுவனர் திரு. எஸ்.என்.வி. நாராயணன் நாடகத்தை இயக்கியிருந்தார். உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இம்மாதம் 21ஆம் தேதி எழுத்தாளர் கழகம் நடத் திய கம்பன் விழாவில் இந்தக் குறுநாடகம் அரங்கேறியது.

முன்னதாக பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 வரை சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது. தமிழகத்தின் ஆர்.எம்.கே. பொறியியல், தொழில்நுட்பக் கல் லூரி முதல்வர் முனைவர் த. ரெங் கராசா பட்டிமன்றத்துக்கு நடுவ ராகப் பணியாற்றினார். இராமன், தம்பியராக ஏற்றுக் கொண்ட மூவரில் ஏற்றம் பெற்ற வன் குகனே என்று முனைவர் க. இராஜகோபாலனும் திரு. சுப. அரு ணாசலமும் வாதிட்டனர்.

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த சிங்கப்பூருக்கான இலங்கைத் துணைத் தூதர் திரு. அமீர்அஜ்வத்துக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் (வலது). இடப்பக்கம் கழகத்தின் செயலாளர் திரு சுப. அருணாசலம் உள்ளார். படம்: நாதன் வீடியோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!