சமூகத் தோட்டக்கலையை ஊக்குவிக்கும் திருவிழா

வைதேகி ஆறுமுகம்

இந்த ஆண்டு 7ஆவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் பூந்தோட்டத் திருவிழா வில் பலவகையான உள்ளூர், வெளிநாட்டுத் தாவரங்களைக் கொண்ட 70க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்களை மக்கள் கண்டு மகிழலாம். கரையோரப் பூந்தோட்டங் களில் கிட்டத்தட்ட 10.1 ஹெக்டர் பரப்பளவில் காட்சி இடம் பெற்றுள்ளது.

'வண்ணங்கள் நிறைந்த உலகம்' எனும் கருப்பொருளைக் கொண்டுள்ள இவ்வாண்டின் விழா வெப்பமண்டலப் பகுதி யில் உள்ள தாவரங்களை பிரதி பலிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தரும் மக்களின் கண்களுக்குக் குளிர்ச்சியான வகையில் பல வண்ணமயமான மலர்களும் தாவரங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. இவ்விழாவை மேலும் சுவார சியமாக்கும் முறையில் சிங்கப் பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகத் தோட்டங்கள் மூலம் ஒன்றிணைந்த குடியிருப்பாளர் களும் இந்த விழாவில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.

தோட்டக்காரர் கிண்ணம் எனும் போட்டிக்காக 200க்கு மேற்பட்ட சமூகத் தோட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து 8 மாத காலமாக அழகிய தோட்டங்களை அமைத் துள்ளனர். இதில் பங்கேற்றவர்களில் வட மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தைச் சேர்ந்த 57 வயது திருமதி லலிதா நாயரும் ஒருவர்.

தோட்டக்காரர் கிண்ணப் போட்டியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிறந்த தோட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் தோட்டம். படங்கள்: தேசிய பூங்காக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!