சாலையின் நடுவில் தடுப்புச் சுவரில் மோதி ஆடவர் பலி

தெம்பனிசில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு மாண்டு போனார். தெம்பனிஸ் அவென்யூ 9க்குச் செல்லும் வழியில் தெம்பனிஸ் அவென்யூ 2ல் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் காலை 9.09 மணிக்கு போலி சாருக்கு தகவல் கிடைத்தது. புளோக் 208க்கு அருகில் விபத்து நடந்த இடத்துக்கு அவசர மருத்துவ உதவி வாகனத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுப்பிவைத்தது. சுயநினை வற்ற நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மாண்டு போனார். விபத்தை நேரில் கண்ட ஒருவர் சீன நாளிதழான லியன்ஹ வான்பாவ்விடம் இந்தத் தகவல் களைக் கூறினார். விபத்தில் சிக்கிய ஆடவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

தெம்பனிஸ் அவென்யூ 2ல் இருக்கும் புளோக் 208க்கு அருகில் விபத்து நேர்ந்தது. படம்: வாசகர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!