சாபாவில் மரம் தொடர்பான நிறுவன அலுவலகங்கள் மீது சோதனை

கோத்தா கினாபாலு : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சாபா மாநிலத்திலுள்ள மரம் தொடர்பான நிறுவனங்களின் அலுவலகங்களின் மீது சோதனை நடத்தியுள்ளது. தேசிய முன்னணி தலைமையிலான முன்னைய அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள ஒப்பந்தங்களை விசாரிக்க அந்த ஆணையம் முனைகிறது. சன்டகான், தவாவ் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள மூன்று நிறுவனங்களின் மீது ஒரே நேரத்தில் ஆணையம் சோதனைகளை நடத்தியதாக 'தி ஸ்டார்' நாளிதழ் தெரிவித்தது.

சன்டகானிலுள்ள சாபா வனத்துறை தலைமையகம் மீது அதிகாரிகள் நேற்று தேடுதலை நடத்தினர். சாபாவின் புதிய முதலமைச்சர் முகமது ஷஃபி அப்டல், மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ள வேளையில் இந்தச் சோதனைகள் நடந்தன. ஒரு கட்சியின் ஆதிக்கத்தால் பத்து ஆண்டுகளுக்கு மேல் நிறுவனங்கள் கூட்டாகச் செயல்பட்டு வந்ததாகவும் அதனால் மக்களுக்கும் மாநில பொருளியலுக்குமான ஆதாயம் மிகக் குறைவு என்று திரு ஷஃபி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!