சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக தொண்டர் களும் கருணாநிதியின் அபிமானிகளும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். கடந்த 27ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகவும் சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவும் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்துக் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டி திமுகவினர் பிரார்த் தனைகளில் ஈடுபட்டனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர் கள், திரையுலகத்தினர் என ஏராளமானோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவ மனைக்குச் சென்று விசாரித்து அறிந்தனர்.
இத்தகய சூழ்நிலையில் தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகக் கூறப் படுகிறது. இதையடுத்து அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
"மருத்துவர்கள் முன்னிலையில் கருணாநிதி நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிறிது நேரம் சிறப்புப் பயிற்சி அளித்தனர். அவரது உடல் மருந்துகளை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"கருணாநிதி சுயமாக சுவாசிக்கிறார். தேவைப்பட்டால் மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்," என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே கருணாநிதி நலம் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்துக் கவலை கொண்டு திமுகவினர் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.