பழிதீர்த்துக்கொண்ட சிந்து

நான்ஜிங்: உலகப் பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். சீனாவின் நான் ஜிங் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவைச் சந்தித்த சிந்து 21=17, 21=19 என நேர்செட்களில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஒகுஹாராவிடம் தோற்றார் சிந்து. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் ஒகுஹாராவை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டார் சிந்து.

தொடக்கத்தில் ஒகுஹாரா சிறப்பாக விளையாடி முன்னிலை வகித்தார். ஆனால் துவளாமல் பதிலடி கொடுத்த சிந்து தமது ஒகுஹா ராவின் வெற்றிக் கனவைக் கலைத்தார். சிந்து தமது மட்டையை ஓங்கி அடித்தபோதெல்லாம் ஷட்டல்காக்கை நோக்கி பாய்ந் தார் ஒகுஹாரா. ஆனால் சிந்துவின் மட்டை யிலிருந்து கிளம்பிச் சென்ற ஷட்டல்காக் மின்னல் வேகத்தில் செல்ல அதை மீட்பதில் சிரமப் பட்டார் அவர். இறுதியில் சிந்துவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒகுஹாரா சரணடைந் தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!