நான்ஜிங்: சீனாவில் நடைபெற்ற உலக பூப்பந்து வெற்றியாளர் கிண்ண இறுதிப் போட்டியில் மக ளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரினிடம் போராடி தோற்று வெள்ளிப் பதக் கத்தோடு விடைபெற்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. சீனாவின் நான்ஜிங் நகரில் இப்போட்டி நடைபெற்று வந் தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்த்து மோதினார் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனை பி.வி.சிந்து. இதற்குமுன் இருவரும் 11 முறை மோதி இருந்தனர். அதில் சிந்து 6 முறையும் கரோலின் மரின் 5 முறையும் வென்றிருந்தனர். இதனால், இந்த ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்புடன் பார்க்கப்பட்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்துவை 21=19, 20=10 என்ற நேர் செட்களில் எளிதாகத் தோற் கடித்தார் கரோலின் மரின். முதல் செட்டில் கரோலி னுக்குக் கடும்நெருக்கடி கொடுத்து விளையாடினார் சிந்து. தொடக்கத்தில் புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று பயணித்த சிந்துவால், கரோ லினின் அதிரடி வீச்சுகளுக்கும் 'பிளேஸ்'களுக்கும், 'சர்வீஸ்' களுக்கும் ஈடுகொடுக்க முடியவி ல்லை. பல முறை சிந்துவும் சரிசம மான புள்ளிகளை எட்டியபோ திலும், கரோலின் இறுதியா க 21-19 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினா ர்.
இரண்டாவது செட்டில் முற்றிலும் ஆட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டுகரோலின் விளையாடினார். மிகுந்த போராட்டம் குணம் கொண்டவராகக் கருதப்படும் சிந்து, இரண்டாவது செட்டில் கரோலினின் அனல்பறந்த ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து விளையாட முடிய வில்லை. முடி வில் 20-10 என்ற செட் கணக் கில் சிந்துவை சாய்த்தார் கரோலின்.