சமந்தா எடுத்துள்ள புது முடிவு

சமந்தா நடித்து முடித் துள்ள இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் தேதி 'யு டர்ன்', 'சீமராஜா' ஆகிய இரு படங்களும் வெளியாக இருப்பது தமக்குக் கூடுதல் உற்சாகம் அளித்திருப்பதாகச் சொல்கிறார் சமந்தா. ஒரே சமயத்தில் இரு படங்கள் வெளியாவது தமக்கு ராசியாக உள்ளது என்றும் சொல்கிறார். "யு டர்ன்' படத்தில் செய்தியாளராக நடித்துள்ளேன்.

இது ஒரு கொலைச் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கும் படம். 'சீமராஜா' கிராமத்துப் படமாக உருவாகி உள்ளது. இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்," என்கிறார் சமந்தா. இவர் நடித்து ஒரே நாளில் வெளியான 'இரும்புத்திரை', 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இந்நிலையில் மீண்டும் சமந்தாவின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இவையும் வெற்றி பெறும் என அவர் நம்புகிறாராம். இதற்கிடையே தெலுங்கில் வாய்ப்புகள் அதிகரிப்பதால் தமிழில் சில வாய்ப்புகளை சமந்தா நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை சமந்தா தரப்பு உறுதி செய்யவில்லை. எனினும் இளம் நாயகர்களின் படங்களில் மட்டுமே இனி நடிப்பது என அவர் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கேற்ப கதை கேட்டு வருவதாகவும் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!