கோவை: போலிச் சான்றிதழ் களை அளித்து ஆஸ்திரே லியா சென்ற மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைய டுத்து கேரளா, தமிழகத் தைச் சேர்ந்த அம்மாணவர் கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்தி ருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அவை போலியானவை என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைய டுத்து விசாவை ரத்து செய்துள்ளனர்.
இம்மாணவர்கள் அனைவரும் கோவையில் இயங்கும் 3 ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியா சென்றவர்கள். இந்நிலையில் தங்களது அசல் சான்றிதழ் களை இந்நிறுவனங்களிடம் அளித்ததாகக் குறிப்பிட் டுள்ள மாணவர்கள், அந்த நிறுவனங்கள் போலியாக தேசிய அங்கீகார வாரி யத்தின் சான்றிதழைத் தங்களுக்கு அளித்ததாகத் தெரிவித்துள்ளனர். தாங்கள் போலிச் சான்றி தழ்களைக் கேட்கவில்லை என்றும் மாணவர்கள் குறிப் பிட்டுள்ளனர்.
22 பேரும் விவசாயம் மற்றும் நடுத் தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இதற்கிடையே மாணவர் களுக்குப் போலி சான்றிதழ் வழங்கிய ஏஜென்சிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.