சென்னை மெரினா கடற் கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட் டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடல் அடக்கம் செய்யப் பட்ட இடம் நேற்று முன்தினம் பல்வேறு காய்கனிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு மலர்களும் இந்த அலங்காரத்தில் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் தினமும் வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
படம்: தமிழக தகவல் ஊடகம்