கைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு

பெண்ணின் பாவாடைக்குள் தன் கைபேசிவழி படம் பிடித்த 27 வயது ஆடவரைக் கையும் களவுமாகப் பிடித்த 26 வயது பொறியாளர் திரு கோ டொங் என் பொதுநல உணர்வுடன் செயல்பட்டதற்காகப் பாராட்டுப் பெற்றார். பொது போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்தியத்தில் நேற்று நடைபெற்ற போலிசார் விருதளிப்பு நிகழ்ச்சியில் கோவுக்கு பொதுநல உணர்வுமிக்கச் செயலுக்கான போலிஸ் விருது வழங்கப்பட்டது.

ஜூலை 27 அன்று மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்தில் இருந்த மின்படிக்கட்டருகே ஓர் ஆடவர் மின்படியில் இருந்த ஒரு பெண்ணின் பின்னால் அவசரமாகச் சென்று நின்றதையும் திரு கோ பார்த்தார். வேலைக்குச் சென்றுகொண்டிருந்த திரு கோ, ஆடவர் கைபேசியைக் கொண்டு அந்தப் பெண்ணின் பாவாடைக்குள் படம் பிடித்ததைக் கவனித்துவிட்டார்.

உடனே, ஆடவரை அணுகி அவரை நிலையத்திலேயே தடுத்து வைத்துவிட்டு இன்னொருவரின் உதவியுடன் ரயில் நிலையத்தின் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார். இதுபோன்ற பொதுநல உணர்வுமிக்க செயல்களால் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் குற்றம் நிகழாமல் இருக்கும் என்றும் பயணம் செய்வோர் எவ்வேளையிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் திரு கோவுக்கு விருதளித்த போலிஸ் உயர் அதிகாரி இவோன் எங் கூறினார்.

திரு கோவுக்கு விருதளிக் கிறார் பொதுப் போக்குவரத்து பாதுகாப்புத் தளபத்தியத்தின் தலைவர் இவோன் இங். படம்: சிங்கப்பூர் போலிஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!