‘பாண்டியா ஆல்ரவுண்டரா?’

புதுடெல்லி: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக் கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் போராடி தோற்றது. 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்ட வித்தியாசத்தில் மோசமாக தோற் றது. தொடர் தோல்வி குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் தோல்விக்கு ஹர்திக் பாண்டி யாவை மோசமாகத் தாக்கியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ஹர்திக் பாண்டியா ஓட்டங்களைக் குவிக்கவில்லை. அவரது பந்துவீச்சின் மீதும் அணித் தலைவருக்கு நம்பிக்கை இருப்பதுபோல் தெரியவில்லை. அவர் இதே நிலையில் தொடர்ந்து பந்து வீசினால் வருங்காலத்தில் அணியில் தேர்வாவது கடினம் தான். முதல் டெஸ்டில் ஸ்டோக்ஸ் மற்றும் கர்ரன் ஆகியோர் பந்தடிப் பதிலும் பந்து வீசுவதிலும் சிறப்பாக ஆடினர். அதேபோல் இரண்டாவது டெஸ்டில் வோக்ஸ் சிறப்பான ஆல்ரவுண்டராக திறமையுடன் செயல்பட்டார். அவர்களின் ஆல்ரவுண்டர் திறமையைப் போல் சிறப்பான ஆட் டத்தை அதே போட்டிகளில் நாம் பாண்டியாவிடம்தான் எதிர்பார்த் தோம்.

ஆனால், அவரால் ஒரே இரவில் கபில் தேவ் ஆக முடிய வில்லை. எனவே, அவரை நாம் 'ஆல்ரவுண்டர்' என அழைப்பதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஹர்பஜன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!