நாட்டிங்ஹம்: இங்கிலாந்து கிரிக் கெட் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டி களிலும் விராத் கோஹ்லி தலை மையிலான இந்திய அணி தோல் வியைத் தழுவியது. பந்தடிப்பா ளர்கள் சிறப்பாகச் செயல்படாததே இதற்குக் காரணம். இந்நிலையில், மூன்றாவது போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இரண்டாவது ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத ஷிகர் தவான் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
அறிமுக வீரராக அடியெடுத்து வைத்தார் இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட். காயத் திலிருந்து குணமடைந்து வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்குத் திரும்ப, இந்தியா வின் பந்துவீச்சு வரிசை மேலும் வலுவடைந்துள்ளது. முதலிரு போட்டிகளில் சிறப் பாக ஆடிய ஆல்ரவுண்டர் சேம் குர்ரன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் அணிக்குத் திரும்பி யதே இதற்குக் காரணம். குர்ரனை நீக்கிய முடிவு விவா தத்தைக் கிளப்ப, "தலைவராக நான் எடுத்த மிகக் கடினமான முடிவு இதுதான்," என விளக்க மளித்தார் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்.