நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகித்த இளம் நாயகன்

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு திரையுலகத்தினர் நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இளம் நாயகன் அபி சரவணன் நேரடியாக அங்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வயநாடு, குட்டநாடு பகுதிகளில் தனது சகாக்களுடன் முகாமிட்ட அவர், கேரளா நோக்கிச் செல்லும்போதே வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வாங்கியுள்ளார். பிறகு வயநாடு பகுதி எம்எல்ஏவைத் தொடர்புகொண்டு, ஆட்சியரின் வழிகாட்டுதல்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2,000 பேருக்கு இவர் கைகொடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!