அழைத்தால் வரும் பேருந்து; டிசம்பரில் சோதனை ஓட்டம்

சிங்கப்பூரில் அழைத்தால் வரும் பேருந்துச் சேவைகள் ஆறு மாதம் பரிசோதனை திட் டத்தில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. அந்தப் பரிசோதனை வரும் டிசம்பரில் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. பரிசோதனை காலத்தின்போது பயணிகள் எந்தவொரு பேருந்து நிறுத்தத்திற்கும் வரும் படி பேருந்துகளை அழைக்கலாம். அதேபோல தாங்கள் இறங்கிக்கொள்ள விரும்பும் இடங்கள் பற்றிய விவரங்களையும் தெரிவித்து அவர்கள் கைத்தொலைபேசிச் செயலி வழி வேண்டுகோள் விடுக்கலாம் என்று ஆணையம் தெரிவித்தது.

பரிசோதனை, குறிப்பிட்ட சேவைகளுடன் தொடங்கும். உச்சநேரம் அல்லாத இதர நேரங்களில் பேருந்துக்கு அவ்வளவாக தேவையில்லாத வழித் தடங்களில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை திட்டம் தொடர் பிலான இடங்கள், செயல்படும் நேரம் போன்ற பல விவரங்கள் பின்னர் ஒரு தேதியில் அறிவிக்கப்படும்.

பரிசோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப் படும் வழித்தடங்களில் வழக்கமாக ஓடுகின்ற பேருந்துகள் தொடர்ந்து சேவை வழங்கும் என்றாலும் அந்த பேருந்துகள் செயல்படும் நேர இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்கும். பரிசோதனை தொடர்பில் இரண்டு நிறு வனங்களுக்கு $2.26 மில்லியன் மதிப்புள்ள குத்தகையை தான் வழங்கி இருப்பதாக ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித் தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!