யங்கூன்: மியன்மாரில் ஓர் அணைக்கட்டு உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரண மாக நீர் ஒரு நகரம் மற்றும் இரு கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட நேர்ந்தது. திடீர் வெள்ளப்பெருக்கால் மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டதாக தீயணைப்புப் படையினர் கூறினர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதி களிலிருந்து 5,400 பேர் வெளியேற்றப்பட்டதாக பேரிடர் நிவாரணக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சுமார் 1,500 பேர் வெள்ளநீரால் பாதிக்கப்படாத மற்றொரு நகரில் தற்காலிகமாக தங்கவைக்கப் பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். மேலும் 1,500 பேர் அருகில் உள்ள பெளத்த மடாலயத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்த கிராமங் களிலிருந்து மக்களை வெளி யேற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அணைக்கட்டு உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிர் சேதம் இல்லை என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். மியன்மாரில் இந்த ஆண்டு ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 100,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப் பட்டனர்.
மியன்மாரில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மூங்கில் மிதவை மூலம் கிராம மக்கள் காப்பாற்றப் பட்டனர். மியன்மாரில் ஓர் அணைக்கட்டு உடைந்ததால் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளநீர் அருகில் உள்ள ஒரு நகரம் மற்றும் இரு கிராமங்களுக்குள் புகுந்தது. படம்: ராய்ட்டர்ஸ்