அதிமுக சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர்

சேலம்: எந்நேரத்திலும் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயாராக உள் ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள் ளார். சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல் வர் பழனிசாமி திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் கோப்புகள் விரைவாக பார்க்கப் பட்டு வருகிறது, காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன," என்றார். "தமிழகம் பல்வேறு துறை களில் வளர்ச்சி பெற்றுள்ளதால் மத்திய அரசிடம் இருந்து விருது களை பெற்றுள்ளது. "தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது," என்றார்.

இதற்கு முன்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். "இந்திய அளவில் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங் களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. "பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றுவதற்கு அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. பல் வேறு துறைகளில் முன்னோடி மாவட் டமாக சேலம் திகழ்கிறது.

"சேலம் மாநகராட்சியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.1.8 கோடி வழங்கப்பட்டுள்ளது. "முல்லைப் பெரியாறு அணை யின் நீர் மட்டத்தை குறைக்கவே கேரள அரசு திட்டமிட்டுப் பேசி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறாக தகவல்களைத் தெரிவிக்கிறது. 142 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் நீரை தேக்கிக்கொள்ளலாம் என ஆய்வு தெரிவிக்கிறது," என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!