லிட்டில் இந்தியாவில் செயல்படும் வர்த்தகங்களின் உற்பத்தித் திற னை மேம்படுத்துவதிலும் தொழில் நடத்துவதற்கான செல வினத்தைக் குறைத்து, புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றுவதிலும் மின்னிலக்கமயமாதல் ஒரு முக் கிய அம்சமாக விளங்குவதாக வர்த்தக, தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு, மின் வணி கம் மூலம் வர்த்தகங்கள் சிங்கப்பூ ரின் பரவலான சந்தையைச் சென்றடைய முடியும் என்றார் அவர். இதற்கு, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'Daily Everything Indian' (dei.com.sg) எனப்ப டும் இணையத்தளத்தைச் சுட்டி னார் திரு சீ.
லிட்டில் இந்தியா கடைக்கா ரர்கள், மரபுடைமை சங்கம் (லிஷா) நேற்று ஏற்பாடு செய்திருந்த 'BIZ CONNEXION 2018' எனப்படும் அதன் 5வது வர்த்தகக் கருத் தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். மின்னிலக்கத் தொழில்நுட்பங் களின் பயன்பாடு வருகையாளர்க ளின் அனுபவங்களை மேம் படுத்த உதவுவதாகவும் லிட்டில் இந்தியாவின் மரபுடைமையைப் பற்றி அவர்கள் ஆழமாக அறிந்து கொள்ள அவை வகைசெய்வதா கவும் திரு சீ சொன்னார். அவ்வட்டாரத்தின் கலாசாரக் கூறுகளை வருகையாளர்கள் தெரிந்துகொள்ள 'ஆக்மென்டட் ரியேலட்டி' எனப்படும் மேம்படுத்தப் பட்ட மெய்நிகர்நிலை தொழில்நு ட்பம் 'ஆர்ட்வாக் லிட்டில் இந்தி யா'வில் பயன்படுத்தப்படுவதாக அவர் எடுத்துரைத்தார்.
'BIZ CONNEXION 2018' எனப்படும் லிஷாவின் 5வது வர்த்தகக் கருத்தரங்கில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் (வலது), அங்கு ஆடை அணியப்பட்ட 'ரோபோ' இயந்திரத்துடன் உரையாடினார். எதிர்காலத் தொழில்நுட்பத்திற்கு வர்த்தகங்களைத் தயார்ப்படுத்த இந்தக் கருத்தரங்கு நோக்கம் கொண்டு உள்ளது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்