ஏர் இந்தியாவில் இருக்கை மீது சிறுநீர் கழித்த ஆசாமி

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி இருக்கை மீது குடிபோதையில் ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லியிலிருந்து நியூ யார்க் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் இருக்கை மீது குடிபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படு கிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் இந்தி ராணி கோஸ் என்பவர் வெளி யிட்ட டுவிட்டர் தகவலில் ஏர் இந்தியா அவமானமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று முன் தினம் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், என் அம்மா உட் கார்ந்திருந்த இருக்கை மீது சிறு நீர் கழித்துள்ளார். இது எனக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, இது குறித்து ஏர் இந்தியா உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!