கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து பேருந்துகளிலும் டாக்சி களிலும் புகைபிடித்ததாகக் கூறி கிட்டத்தட்ட 500 பேர் பிடிபட்டனர். புகைபிடித்தல் (தடை விதிக்கப் பட்ட இடங்கள்) சட்டத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் அல்லது வாகனங்களில் புகைபிடித் தால் $1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து உள்ளது. புகைபிடித்தல் தொடர்பான அனைத்து குற்றங்களுக்கும் கடந்த ஆண்டில் 22,000 அழைப் பாணைகள் விடுக்கப்பட்டன. ஒப்புநோக்க, பொதுச் சேவை வாக னங்களில் புகை பிடித்து சிக்கியோ ரின் எண்ணிக் கை குறைவுதான் என்றாலும் அண்மைய ஆண்டு களாக இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்தச் சட்டம் தனியார் வாடகை வாகனங்களுக்கும் விரி வுபடுத்தப்பட்டதால் இந்த எண் ணிக்கை மேலும் உயரலாம் என கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். பொதுச் சேவை வாகனங்கள் மட்டுமின்றி, பொதுவாக எல்லா வாகனங்களிலுமே ஓட்டுநர்கள் புகைபிடிப்பதைக் காண முடிகிறது என்று திரு ரோனி லிம், 73, என்பவர் தெரிவித்தார். "சன்னல் கண்ணாடியைத் திறந்துவைத்துக்கொண்டு கையி ல் சிகரெட்டுடன் அவர்கள் தங்கள் கையைத் தொங்கவிட்டபடி செல்வர். சிகரெட் தீர்ந்ததும் அதை அப்படியே கீழே போட்டுவி ட்டுச் சென்றுவிடுவர்," என்றார் அவர். சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி சேவை வழங்குநரான கம்ஃபர்ட்டெல்குரோ, "புகைபிடிக்க விரும்பும் டாக்சி ஓட்டுநர்கள் அதை வெளியிலேயே முடித்துக் கொள்ள வேண்டும். டாக்சியில் புகைபிடித்ததாகக் கூறி முதல் முறை பிடிபடும் ஓட்டுநர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.