குடியிருப்பாளர்கள் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை சமூக இடங்களில் எளிதில் பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சுவா சூ காங் குழுத் தொகுதியில் சமூக சுகாதாரச் சாவடிகள் கியட் ஹோங், சுவா சூ காங், நன்யாங், ஹில்வியூ, அர்-ரவுதா பள்ளி வாசல், அல்-கேர் பள்ளிவாசல் ஆகிய ஆறு இடங்களில் நேற்று தொடங்கப்பட்டன. தேசிய பல்கலைக்கழக மருத் துவமனைக் குழுமத்தின் ஒத்து ழைப்புடன் இத்திட்டம் மேற்கொள் ளப்படுகிறது. நாள்பட்ட நோய் உடையவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள சமூக சுகாதாரச் சாவடிக் குச் சென்று சிகிச்சை நாடலாம். நேற்றுக் காலை சுமார் 600 குடியிருப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து உற்சாகமாக உடற்பயிற்சி செய்தனர். 'ஹிஜ்ரா நடை' எனும் இந்த நிகழ்ச்சிக்கு அர்-ரவுதா பள்ளி வாசல், அல்-கேர் பள்ளிவாசல், மக்கள் கழகம், பெர்தாப்பிஸ் மலாய் அமைப்பு, சுவா சூ காங் குழுத் தொகுதியில் உள்ள சமூக மன்றங்களில் செயல்படும் மலாய் நற்பணிச் செயற்குழுக்கள் ஆகி யவை கூட்டாக ஏற்பாடு செய்தி ருந்தன.
சுவா சூ காங் குழுத் தொகுதி குடியிருப்பாளர்களுடன் ஹில்வியூ சமூக மன்ற வளாகத்தில் நேற்றுக் காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டனர் அக்குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இடமிருந்து, முன் வரிசை) மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங், துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், யீ சியா சிங். படம்: பெரித்தா ஹரியான்