பொங்கோல் ஈஸ்ட் நகரில் புதிய சமூக மன்றம்

பொங்கோல் ஈஸ்ட் தொகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க மற்றொரு குழந்தைப் பராமரிப்பு நிலையத் தைப் பெறுவார்கள். வரும் 2020ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் புதிய பொங்கோல் ஈஸ்ட் சமூக மன்றத்தில் அந்தக் குழந்தைப் பராமரிப்பு நிலையம் செயல்படும். ஐந்து மாடிகள் கொண்ட புதிய சமூக மன்றக் கட்டடத்தின் உச்ச மாடியில் குழந்தைப் பராமரிப்பு நிலையம் அமைந்திருக்கும். சமூக மன்றக் கட்டடத்தில் கீழ்த்தளமும் இருக்கும்.

தற்போது ரிவல்வேல் டிரைவில் அமைந்துள்ள பொங்கோல் ஈஸ்ட் சமூக மன்றத்தைக் காட்டிலும் எட்டு மடங்கு பெரியதாக இருக்கும் புதிய சமூக மன்றம், புதுப்பிக் கக்கூடிய கட்டுமானப் பொருட்கள், முன்னரே செய்து வைக்கப்படும் சுவர்கள் போன்ற அம்சங்களுடன் அமைக்கப்படும். இவை சமூக மன்றம் கட்டப் படும் இடத்தில் கட்டுமானப் பணி களைக் குறைக்கும். நேற்றுக் காலை நடைபெற்ற சமூக மன்றக் கட்டடத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் பேசிய பொங்கோல் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சார்ல்ஸ் சோங், புதிய சமூக மன் றம் குடியிருப்பாளர்கள் சந்தித்து, கலந்துறவாட, கற்றுக்கொள்ள சிறந்த இடமாகக் திகழும் என்றார்.

பொங்கோல் ஈஸ்ட் தொகுதியின் குடியிருப்பாளர்கள் படைத்த இசை நிகழ்ச்சியை துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (வலமிருந்து 3வது), பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சோங் (இடமிருந்து 2வது) ரசிக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!