பொங்கோல் ஈஸ்ட் தொகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க மற்றொரு குழந்தைப் பராமரிப்பு நிலையத் தைப் பெறுவார்கள். வரும் 2020ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் புதிய பொங்கோல் ஈஸ்ட் சமூக மன்றத்தில் அந்தக் குழந்தைப் பராமரிப்பு நிலையம் செயல்படும். ஐந்து மாடிகள் கொண்ட புதிய சமூக மன்றக் கட்டடத்தின் உச்ச மாடியில் குழந்தைப் பராமரிப்பு நிலையம் அமைந்திருக்கும். சமூக மன்றக் கட்டடத்தில் கீழ்த்தளமும் இருக்கும்.
தற்போது ரிவல்வேல் டிரைவில் அமைந்துள்ள பொங்கோல் ஈஸ்ட் சமூக மன்றத்தைக் காட்டிலும் எட்டு மடங்கு பெரியதாக இருக்கும் புதிய சமூக மன்றம், புதுப்பிக் கக்கூடிய கட்டுமானப் பொருட்கள், முன்னரே செய்து வைக்கப்படும் சுவர்கள் போன்ற அம்சங்களுடன் அமைக்கப்படும். இவை சமூக மன்றம் கட்டப் படும் இடத்தில் கட்டுமானப் பணி களைக் குறைக்கும். நேற்றுக் காலை நடைபெற்ற சமூக மன்றக் கட்டடத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் பேசிய பொங்கோல் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சார்ல்ஸ் சோங், புதிய சமூக மன் றம் குடியிருப்பாளர்கள் சந்தித்து, கலந்துறவாட, கற்றுக்கொள்ள சிறந்த இடமாகக் திகழும் என்றார்.
பொங்கோல் ஈஸ்ட் தொகுதியின் குடியிருப்பாளர்கள் படைத்த இசை நிகழ்ச்சியை துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (வலமிருந்து 3வது), பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சோங் (இடமிருந்து 2வது) ரசிக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்