இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிர தமராகக் கடந்த மாதம் பதவி ஏற்ற இம்ரான் கான், 65, சிக்கன நடவடிக்கைகளை முடுக்கிவிட் டுள்ளார். அரசாங்கத்தை நடத்தப் போது மான நிதி இல்லாத காரணத்தால் பொருளியல் சீர்திருத்த நடவடிக் கைகளை அவர் எடுத்து வரு கிறார். கஜானா காலியாக இருப்பதால் 1.7 பில்லியன் ரூபாயை இந்த ஆண்டில் வருவாயாகத் திரட்டு வது அவரது திட்டம். அதன் ஒரு பகுதியாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் சொகுசு கார்களை ஏலத்தில் விட்டு பணம் ஈட்ட அவர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் நகரில் ஆடம்பர கார் ஏலம் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் ஆர்வத் துடன் பங்கேற்றனர்.
இருப்பினும் கார்களை ஏலம் எடுப்பதில் ஆர் வம் குறைவாகக் காணப்பட்டது. மொத்தம் 101 கார்கள் ஏலத் திற்கு விடப்பட்டதில் 61 கார்கள் ஏலம் போயின. அதன் மூலம் சுமார் 200 மில்லியன் ரூபாய் நிதி திரண்டது. இருப்பினும் பிரதமர் இம்ரான் கான் எதிர்பார்த்த அள வுக்கு ஏலம் போகவில்லை என்றும் அவரது நடவடிக்கைக்கு இது ஒரு பின்னடைவு என்றும் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார். பிரதமர் கணித்திருந்த தொகை யில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே திரண்டு உள்ளது என்று முகம்மது ஆசிஃப் எனப்படும் அந்த அதி காரி ஜியோ தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். ஏலத்திற்கு விடப் பட்ட கார்களில் மூன்றில் ஒரு பங்கு பத்தாண்டுகள் பழமையானவை. மேலும், 32 ஆண்டுகள் பழ மையான டொயோட்டா கொரோலா கார்கள் இரண்டும் ஏலத்தில் இடம் பெற்றன. இவற்றுடன், ஒவ்வொன் றும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் விலை மதிப்புள்ள குண்டு துளைக்காத மெர்சிடிஸ் கார்களும் ஏலப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் சொகுசு கார்கள் ஏலத்திற்காக காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. படம்: ராய்ட்டர்ஸ்