பூனையைக் காப்பாற்ற இணையத்தில் மனு: பதில் அளித்த நகர மன்றம்

பாசிர் ரிஸ் அக்கம்பக்க வீடமைப்பு பேட்டையில் திரிந்து கொண்டிருந்த பூனை ஒன்றை பாசிர் ரிஸ்=பொங்கோல் நகர மன்றம் அங்கிருந்து நீக்குவதற்கு எதிராக இணையத்தில் அவ்வட்டாரவாசிகள் ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11ல் காணப்பட்ட 'ஜின்ஜர்' எனப்படும் அந்தப் பூனையை அந்நகர மன்றம் அப்பகுதியிலிருந்து நீக்க இருப்பதாக அறியப்படுவதாக மனுவில் கூறப்பட்டது. நேற்று பிற்பகல் நிலவரப்படி மனுவில் 15,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டிருந்தனர். அப்பூனை தனது கார் மீது ஏறி கீறியதால் அந்த காரின் உரிமையாளர் ஒருவர் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அப்பூனையை நீக்க திட்டம் இருப்பதாக செய்தி பரவியது. இதன் தொடர்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்த பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம், அப்பூனையை அப்பகுதியிலிருந்து நீக்கவோ இடமாற்றம் செய்யவோ தனக்கு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!