சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குச் சென்றதால் சென்னை யில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுவதை யொட்டி நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகரில் உள்ள பல லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றவண்ணம் உள்ளனர். சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வோரின் வசதிக் காக தமிழக அரசு 11,367 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.
மேலும் போக்குவரத்து நெரி சலைக் குறைக்கும் விதமாக தாம் பரம், தாம்பரம் மெப்ஸ், கேகே நகர், மாதவரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய இடங்களி லிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தீபாவளி பண்டி கையைக் கொண்டாட ஏராளமா னோர் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்களது சொந்த ஊர் களுக்குப் படையெடுத்து வருகின் றனர்.
சிறப்புப் பேருந்துகளின் இயக் கத்தால் சென்னை கோயம்பேட்டில் நேற்றும் நேற்று முன்தினமும் கடுமையான போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நீண்டநேரம் காத்தி ருந்தனர். இனி வரும் இரண்டு நாட்களிலும் போக்குவரத்து பெரி தும் பாதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதேபோல் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங் களிலும் சொந்த ஊர் செல்லும் மக்கள் அதிகளவில் குவிந்ததால் வழக்கத்தைவிட அதிகக் கூட்ட மும் நெரிசலும் காணப்பட்டது.