சேலம்: சிறைத்துறை தணிக்கை அதிகாரிகள் சேலம் மத்திய சிறை யில் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். 2016 அக்டோ பர் முதல் 2018 ஜூலை வரையி லான காலக்கட்டத்திற்குரிய வரவு, செலவுகள் தணிக்கைக்கு உட் படுத்தப்பட்டன. இதில், கைதிகளுக்கு அவர் களின் உறவினர்கள் கொடுத்த தொகையில் ரூ.8.77 லட்சம் கையா டல் செய்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்தக் கணக்குவழக்குகளைக் கவனித்து வந்த சிறைத்துறை ஊழியர் வெற்றிவேல் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம், ஊழியர் வெற்றிவேல் கடந்த இருபது நாட்களாக வேலைக்கு வரவில்லை.
இதுபற்றி அதிகாரிகளுக்கு எந்த முன்தகவ லும் சொல்லப்படாததும் தெரிய வந்தது. வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவரை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்து சிறைத்துறை கூடுதல் எஸ்பி சங்கர் உத்தர விட்டுள்ளார். இந்த மோசடியில் வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் மத்திய குற்றப் பிரிவு போலிசார் விசாரித்து வரு கின்றனர். சேலம் மத்திய சிறையில் 830க்கும் மேற்பட்ட தண் டனை மற்றும் விசாரணைக் கைதி கள் உள்ளனர்.
அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் கொடுக்கும் பணம் அந்தந்தக் கைதிகளின் கணக் கில் வரவு வைக்கப்படும். இந்தப் பணத்தைக்கொண்டு சிறைக்குள் உள்ள உணவுக்கடை களில் கைதிகள் தங்களுக்குப் பிடித்த தின்பண்டங்களையும் உணவுப் பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இவ் வாறு கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் வழங்கிய தொகை யில் முறைகேடு நடந்திருப்பதாக சிறைத்துறை நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.