சோல்: வடகொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளியல் தடைகளை அகற்றவில்லை என்றால் அணுவாயுதங்கள் தயாரிக்க வகை செய்யும் கொள்கையைப் பின்பற்றுவது குறித்து பரிசீலிக்கப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா பல ஆண்டு களாக அணுவாயுதம் தயாரிக்க வகை செய்யும் கொள்கையை பின்பற்றி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற் காக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அணுவாயுதத் திட்டத்தை நிறுத்தி வைத் துள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. "வடகொரியா மீது விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா அகற்ற வில்லை என்றால் வடகொரியா அதன் முந்தைய கொள்கையை பின்பற்ற வேண்டியிருக்கும்," என்று வடகொரியா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போது அணுவாயுதங்களைக் கைவிட கிம் உறுதி அளித்தார். அதற்கு பிரதிபலனாக ஏற்கெனவே வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளியல் தடைகள் படிப்படியாக அகற்றப் படும் என்று திரு டிரம்ப் உறுதி அளித்திருந்தார். ஆனால் திரு கிம் கொடுத்த வாக்குறுதிப்படி அணுவாயுதங் களைக் களைய வடகொரியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறி வருகிறது.
அணுவாயுதங்களைக் களைய வடகொரியா போதிய வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே அந்நாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் அகற்றப் படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ மீண்டும் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பில் இந்த வாரம் வடகொரிய வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.2018-11-05 06:00:00 +0800