லதா
சில காலம் தங்கிச் செல்லும் பயணத் தமிழர் களாக சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் பின்னர் இங்கேயே குடி யேறினர். தங்களுக்கென புதிய அடை யாளத்தை உருவாக்கச் சிரமப்- பட்டாலும் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டனர். குறைந்த எண்ணிக்கையினரான தமிழர்கள், சிங்கப்பூரின் அரசியல், பொருளியல், கலாசார வளர்ச்சியில் ஆற்றிய பங்கு அளப்பரியது. இருநூறாவது ஆண்டு நிறை வைக் கொண்டாடவுள்ள புதிய சிங்கப்பூரில் தமிழர்களின் வரலாற்றையும் நாட்டு நிர்மாணத்தில் அவர்களது பங்களிப் பையும் தொகுத்து வழங்கும் செரிவான நூல் ஜெர்னிஸ். தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் அனுபவமிக்க முன்னாள் மூத்த பத்திரிகையாளருமான நிர்மலா முருகையன் கிட்டத்தட்ட எட்டு ஆண்டு கால ஆய்வில் இந்நூலை எழுதியுள்ளார்.
பெருமையில் மறைந்த வீழ்ச்சி 1980களின் இறுதியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழர்கள் பலரும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது என பெருமைப்படும் அளவுக்குத் தங்களது சாதனைகள் மூலமாக தனித்து நின்றனர். இந்தச் சிறப்புகள் சமூகத்தின் கடுமையான பிரச்சினை களை மறைத்தன. குறிப்பாக, சமூகம், கல்வி, தனிப்பட்ட துறைகளில் வீழ்ச்சிக்கான அடையாளங்கள் காணப்பட்டன. 2018-11-06 06:00:00 +0800