பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகள் கடந்த அக்டோபர் மாதத்தில் ஊடுருவப்பட்டு ஏராளமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தானிய அர- சாங்க அதிகா ரிகள் அதிர்ச்சி தகவலை வெளி யிட்டுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்பின் இணையக் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்டோபர் 27, 28ஆம் தேதி- களில் 12 வங்கிகளைச் சேர்ந்த கிட்டத் தட்ட 8,000 வாடிக்கையாளர் களின் கணக்குகள் ஊடுருவப்- பட்டுப் பணம் சூறையாடப்பட்டதாக அதி காரிகள் கூறினர்.
அனைத்துலக கட்டண அட் டை கள் மூலம் 'பேங்க் இஸ்லாமி 'யில் இருந்து ரூ. 2.6 மில் லியன் தொகை திருடப்பட்டதாக தெரி விக் கப்பட்டது. இதனை அடுத்து 'பேங்க் இஸ்லாமி' தனது இணைய வர்த்தக நடவடிக்கை, இணையக் கட்டண முறை அனைத்தையும் நிறுத்தி வைத்து உள்ளதாக அவ்வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியது. களவாடப்- பட்ட ரூ. 2.6 மில்லி யனை அந்தந்த வாடிக்கையாளர் களின் கணக்கில் தானே திருப்பி செலுத்திவிட்டதாக அவ்வங்கி தெரிவித்தது. இது தொடர்பான மற்றொரு சம்பவத்தில், பாகிஸ் தானின் கான் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி ஒருவர், தமது வங்கிக் கணக் கிலிருந்து ரூ. 3 மில்லியன் திருடப்பட்டதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.