புதிய அச்சுறுத்தல்கள் உரு வெ- டுக்கும் வேளையில், சிங்கப்பூரில் நிலவிவரும் சமய நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதை உறுதி- செய்யும் சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவையாக இருப்பது அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சமயக் குழுக்களுக்கிடையே பகைமை, வெறுப்புணர்வு ஆகிய- வற்றைத் தூண்டுவோர் மீது அர சாங்கம் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சமய நல்லிணக்- கத்தைக் கட்டிக்காப்பது தொடர் பான சட்டத்தைப் பற்றி அவர் பேசியபோது இத னைக் கூறினார்.
"நல்ல வேளையாக, இந்தச் சட்டத்தின்கீழ் தன்னிடமுள்ள அதிகாரத்தை பயன் படுத்த வேண் டிய தேவை இது வரை அரசாங்கத்திற்கு இல்லை," என்றார் அவர். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 'சமயம் குறித்த எதிர்காலம்' என்ற மாநாட்டில் திரு லீ நேற்று உரையாற்றியபோது இத னைத் தெரிவித்தார். "இருப்பினும், இச்சட்டம் நடப்- பில் இருக்கும் ஒரே கார ணத்தினா லேயே நமது சமய நல்லிணக்கத்- திற்கு அது முக் கியப் பங்காற்றி உள்ளது.
முயிஸ் தலைவர் ஹாஜி முகம்மது அலாமி மூசா (வலமிருந்து இரண்டாவது) பிரதமர் லீ சியன் லூங்கிடம் 'பன்முகத்தன்மைமிக்க உலகில் செழித்தோங்குவது' எனும் தலைப்பைக் கொண்ட புதிய நூல் பிரதி ஒன்றை வழங்கினார். அவர்களுடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியும் (இடக்கோடி) முயிஸின் தலைமை நிர்வாகி அப்துல் ரஸாக்கும் உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்